ஆடி கிருத்திகை 2022 - வழிபடும் முறை மற்றும் பலன்கள் | Aadi Kirithigai 2022 - Worship Method
• ஆடி கிருத்திகை 2022 - வழிபடும் முறை மற்றும...
ஆடி கிருத்திகை 2021 | Aadi Krithigai 2021 | விரத முறை மற்றும் பலன்கள்
• ஆடி கிருத்திகை 2021 | Aadi Krithigai 2021 ...
பங்குனி உத்திரம் 2021-இன்னல்கள் நீக்கும் சரவணபவ யந்திர வழிபாடு|Panguni Uthiram 2021
• #PanguniUthiram பங்குனி உத்திரம் 2021-இன்ன...
இந்தப் பதிவில் ஆடிக் கிருத்திகை அன்று முருகப் பெருமானை எவ்வாறு வழிபடலாம்? ஆடி கிருததிகையின் சிறப்புகள், விரத முறை என்ன? வழிபாட்டின் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் என்னென்ன? என்பதைப் பற்றியும் விளக்கமாக சொல்லப் பட்டுள்ளது. அனைவரும் பார்த்து எம்பெருமான் முருகப் பெருமானின் கருணையைப் பெற்று வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று வள்ளல் முருகப் பெருமான் கருணையாலே மகிழ்வாய் இருக்க வேண்டிக் கொள்கிறேன்
இந்த ஒரு மந்திரம் 100 கோடி மந்திரங்களுக்கு சமம் || This 1 mantra is equal to 1 Crore Mantras
• இந்த ஒரு மந்திரம் 100 கோடி மந்திரங்களுக்க...
கந்தர் அனுபூதி பாடல் 51 | உருவாய் அருவாய் உளதாய் இலதாய் | Uruvaai Aruvaai
• Video
தை கிருத்திகை விரத முறை | வீட்டிலேயே எளிமையாக கடைபிடிப்பது எப்படி? | THAI KIRUTHIKAI VIRATHAM
• தை கிருத்திகை விரத முறை | வீட்டிலேயே எளிமை...
திருவண்ணாமலை தீபம் 2020
கார்த்திகை தீபம் ஏற்றும் முறை, நேரம் மற்றும் விரத முறை
• திருவண்ணாமலை தீபம் 2020 | கார்த்திகை தீபம்...
ஆடி கிருத்திகை 2020 - வேல் வகுப்பு பாராயணம் || Aadi Kiruthikai 2020
• ஆடி கிருத்திகை 2020 - வேல் வகுப்பு பாராயணம...
வெற்றி மேல் வெற்றி பெற
வேல் வகுப்பு பாராயணம்
பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்த குழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும்
பனைக்கை முகபடக் கரட மதத் தவள கசக்கடவுள் பதத்திடு நிகளத்து முளை தெறிக்க அரமாகும்
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை இடித்துவழி காணும்
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்க அருள் நேரும்
சுரர்க்கும் முநிவரர்க்கும் மகபதிக்கும் விதி தனக்கும் அரி தனக்கு நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்
சுடர்பருதி ஒளிப்ப நிலவு ஒழுக்கு மதி ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப்பிரபை வீசும்
துதிக்கும் அடியவர்க்கொருவர் கெடுக்க இடர் நினைக்கினவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கோர் துணையாகும்
சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை அறுத்தெறிய உருக்கி எழும் அறத்தை நிலை காணும்
தருக்கி நமன் முருக்கவரின் இருக்குமதி தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை கழற்கு நிகராகும்
தலத்தில் உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளைவாகும்
தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையதாகும்
சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர் பெருத்த குடர் சிவத்ததொடை எனச் சிகையில் விருப்பமொடு சூடும்
திரைக் கடலை உடைத்து நிறை புனர் கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்து உதிர நிறைத்து விளையாடும்
திசைக் கிரியை முதற்குலிசன் அறுத்த சிறை முளைத்ததென முகட்டினிடை பறக்க அற விசைத்ததிர ஓடும்
சினத்தவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு குறைத் தலைகள் சிரித்தெயிறு கடித்து விழி விழித்தலற மோதும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்திலுறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே
கல்யாண வரம் அருளும்
திருப்புகழ்
விறல்மார னைந்து மலர்வாளி
சிந்த மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்டகொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்
ம கிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை
யஞ்ச வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி
றைஞ்சு மடியாரி டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த பெருமாளே.
குழந்தை வரம் அருளும் பதிகம்
திருப்புகழ்
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.