111. ஸூரத்துல் லஹப் (ஜுவாலை)
வசனங்கள்: 05
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّؕ
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
(அல்குர்ஆன் : 111:1 )
مَاۤ اَغْنٰى عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَؕ
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
(அல்குர்ஆன் : 111:2 )
سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍ ۖۚ
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
(அல்குர்ஆன் : 111:3 )
وَّامْرَاَ تُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِۚ
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
(அல்குர்ஆன் : 111:4 )
فِىْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
(அல்குர்ஆன் : 111:5 )