யோவான்

Опубликовано: 07 Август 2026
на канале: Daily Devotions WCF
286
20

WCF DD (World Christian Fellowship Daily Devotions)
யோவான் 9:41 "இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்."
1) நியாயத்தீர்ப்புநாளில் "ஏன் ஒரு காரியத்தை செய்யவில்லை" என்று நம்மை கேட்கும் போது, நமக்கு அதைக் குறித்து ஞானம் இல்லை என்றால் நம்மை ஆண்டவர் குற்றப்படுத்தமாட்டார். ஆனால் தெரிந்தும் செய்யவில்லை என்றால் நம் பாவம் நிலைநிற்கிறது.
2) யோவான் 15:22 - "நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.". ஏனென்றால் பாவத்தை குறித்து ஏற்கனவே வெளிப்பாடு ஆகிவிட்டது.
3) யோவான் 15:24 - "வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்." இனி அவர்கள் சாக்கு சொல்ல முடியாது, ஏன் என்றால் நான் யார் என்பதையும், என் பெரிய கிரியைகளையும் அறிந்து கொண்டார்கள்.
4) ஏசாயா 42: 6 - மூலம் இயேசு கிறிஸ்துதான் இந்த உலகை மீட்க வந்த ரட்சகர் என்பதற்கான அடையாளங்களை அறிந்திருந்தாலும் அவர்கள் ஆணடவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகர் என்று ஏற்றுக் கொள்ள மறுத்ததற்கு காரணம் தற்பெருமை, தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம். மனத்தாழ்மை. ஒய்வு நாளில் குணப்படுத்தியதை பெரிதுபடுத்தி, அவர் செய்த அற்புதத்தை நிராகரித்தார்கள்.
நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :
1) தாங்கள் அறிந்து கொண்டபடி, தங்கள் விருப்பப்படி காரியம் நடக்காததால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்த அற்புதத்தை பார்த்து "இவரே எங்கள் இரட்சகர், இவரே எங்கள் கிறிஸ்து, சொன்னபடியே குருடனின் கண்களை திறந்து அற்புதம் செய்த இவரை நாங்கள் விசுவாசிக்கிறோம் " என்று சொல்வதற்கு பதிலாக அவரை தேவாலயத்தை விட்டு புறம்பாக தள்ளி பெருமையில் நின்றார்கள்.
2) சிந்தியுங்கள், நாம் மனத்தாழ்மையுடன் இருக்கிறோமா அல்லது பெருமையுடன் இருக்கிறோமா?.
3) நம் சபையில், வாழ்வில் உண்மையை கண்டும், சுய விருப்பப்படி, தேவ வசனத்தை விட்டு பெருமையுடன் காரியங்களை செய்து பாவத்தில் நிற்கிறோமா?.
4) நாம் மனம் திரும்பி ,"ஆண்டவரே நான் எப்போதும் என் இருதய கண்களையும், ஆவிக்குரிய கண்களையும் , ஆவிக்குரிய காதுகளையும் திறந்து வைத்து உம்முடைய வார்த்தையின்படி வாழ எனக்கு கிருபை பாராட்டுங்கள்" என்று கேட்போமாக.
John 9:41 "Jesus said to them, “If you were blind, you would have no sin; but now you say, ‘We see.’ Therefore your sin remains."
1) When the Lord asks us "why did we not do a specific thing" on the Day of Judgment, the Lord does not condemn us if we do not know it or do not have the wisdom.
2) John 15:22 - "If I had not come and spoken to them, they would have no sin, but now they have no excuse for their sin". Because they have already been exposed about sin.
3) John 15:24 - " If I had not done among them the works which no one else did, they would have no sin; but now they have seen and also hated both Me and My Father." They can no longer make excuses, because they know who I am and my great deeds.
4)Isaiah 42:7- "To open blind eyes, To bring out prisoners from the prison, Those who sit in darkness from the prison house".
5) By means of the prophecy of Isaiah, Pharisees were aware of Jesus Christ was the Savior of the world. The miracle of healing the born blind was never happened in this world.
6) Yet they refused to accept the Lord Jesus Christ as their Savior because of their pride and ego.
How to apply this verse in our daily life :
1) Because of things didn't happen as per their knowledge and wish, After seeing Jesus miracle instead of saying, "This is our Savior, this is our Christ, we believe in Him who has opened the eyes of the blind and done wonders.", they cast Him out of Church.
2) Let us think, Are we humble or proud?
3) Are we doing things on our own and neglecting the Word of God because of our pride?.
4) Let us repent and pray to Him as "Lord, Help me keep open the eyes of my heart, my spiritual eyes and my spiritual ears to obey and live as per Word of God".


Bible verse by verse by Bro. Abraham David John, World Tamil Christian Fellowship, London, United Kingdom. For more information please log on to www.wcflondon.com