1. கடமையும் நீதியும் கை கழுவ -அங்கே
கயமையும் பொய்யும் தீர்ப்பெழுத
பல்லவி:
எத்தனை துன்பம், எத்தனை துயரம்
ஏற்றுக் கொண்டாயே என் இறைவா
எத்தனை பாவம் புரிந்த என் மேலே
இத்தனை அன்பா என் இயேசுவே?
2. சுமை சுமப்பவரே, வாருங்கள் - என்று
அழைத்தவர் சிலுவை சுமக்கின்றார்
3.விழுந்தது வல்ல இறை மகனா?- பாவப்
பளுவைச் சுமக்கும் மனுமகனா?
4. அன்னை மகனிடம் பகிர்ந்ததென்ன? - இறை
மகனும் தாயிடம் பகர்ந்ததென்ன?
5. சிலுவையைச் சுமக்க தோள் கொடுத்தார் -அவர்
சிந்தையில் இரக்கம் யார் கொடுத்தார்?
6. இரக்கமும் துணிவும் சேர்கையிலே -அங்கே
இறைமகன் திருமுகம் பார்த்திடலாம்
7. பாரினை மீட்டவர் விழுகின்றார் - அதைப்
பார்த்திடும் வானவர் அழுகின்றார்
8. இயேசுவை நினைத்து அழுகின்றோம்-நம்
நிலையைக் குறித்தே அழ வேண்டும்
9. விழுந்தே கிடக்கும் மானிடரே -அங்கு
விழுந்தவர் மீண்டும் எழுந்து விட்டார்
10. அறந்தனைக் களைந்தவர் இணைகின்றார் - அவர்
அண்ணலின் உடைகளைக் களைகின்றார்
11. கைகளை நீட்டித் தருகின்றார்- தன்னை
கயவர்கள் சிலுவையில் அறைந்திடவே
12. அன்னையை நமக்குத் தந்த பின்னே - அவர்
ஆருயிர் தன்னைத் தருகின்றார்
13: தரணியின் மீட்பர் உடலினையே-அன்னை
தாங்குகின்றார் தன் மடியினிலே
14.. கல்லறையில் அவர் அடங்குகிறார் -தன்
கடமைகள் முடித்தே உறங்குகிறார்
15. உயிர்த்து விட்டார் இயேசு உயிர்த்து விட்டார் -பகை,
பாவத்தை, சாவை ஜெயித்து விட்டார்
#newsiluvaipathaipadal
#wayofthecrosssongintamil
#kadamaiyumneedhiyum
#siluvaipathaipadalgal
#siluvaipathai