ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Whatsapp......https://whatsapp.com/channel/0029Va9U...
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
Hey guys! இப்ப நாம பிரம்பணன் ராமாயணத்தோட அஞ்சாவது பகுதிக்கு வந்துட்டோம். இதுதான் ராமாயணத்தோட முதல் சண்டை காட்சி. இங்க ரெண்டு வேர் அடிபட்டு மயங்கி கிடக்கிறாங்க. அவங்கள ஒரு பாம்பால சுத்தி கட்டி வச்சிருக்காங்க. அவங்க வேற யாரும் இல்ல, ராமரும் லட்சுமணரும் தான் . இதுவரைக்கும் நீங்க அவங்கள இது மாதிரி ஒரு நிலைமையில பார்த்திருக்கவே மாட்டீங்க. எப்பவுமே நீங்க அவங்கள கம்பீரமா வும், வெற்றியடையும், அடுத்தவங்கள தோற்கடிக்கிற மாதிரியும் தான் பார்த்திருப்பீங்க. ஆனா இங்க அவங்க ரொம்ப தனக்கு நிகரே இல்லாத ராட்சசன் ராவணனோட சண்டை போட்டுட்டு இருக்காங்க. இப்படி ஒரு பரிதாபமாக நிலைக்கு ராமரும் லக்ஷ்மணரும் எப்படி ஆளானாங்க?
பாருங்களேன் இந்த சிற்பம் ரொம்ப மோசமா சிதைஞ்சு போயிருக்கு. ஆனா, south east Asia ல இருக்கிற கோவில்கள்ல இது ஒரு popular ஆன காட்சி. இன்னொரு கோவில்ல செதுக்கி இருக்கிற இதே scene அ இப்ப நான் உங்களுக்கு காமிக்கிறேன். அத வச்சு நாம எல்லா details அயும் பார்க்கலாம். இங்க ராமர் தரையில மயங்கி விழுந்து கிடக்கிறத பார்க்கலாம். அவருடைய கண்கள் மூடி இருக்கு. ஆனா கவனமா பாருங்களேன் அவருக்கு பின்னால இன்னொரு முகம் தெரியுது. அது லட்சுமணன். அவரையும் இப்படி ஒரு நினைவு தப்பின நிலைக்கு போற மாதிரி அடிச்சிட்டாங்க. ஏன்னா அவங்க நாக பாசம் என்கிற ஒரு ஆயுதத்தால அடிக்கப்பட்டிருக்காங்க. அது தனக்குள்ள இருந்து பாம்பு மாதிரியான ஆயுதம் வெளி ல வருது. ராமரையும் லக்ஷ்மனரையும் அந்த பாம்பு, கயிறு மாதிரி சுத்திட்டு இருக்குறத பார்க்கலாம். ஆனா ராமரு லக்ஷ்மணரும் திருப்பி ஏன் சண்டை போடல? என்ன அவங்களுடைய எதிரி ஒரு மாயாவி அவன் கண்ணுக்கு தெரியாம மேகங்களுக்கு நடுவுல ஒளிஞ்சிகிட்டு இருக்கான். உங்களால அவன பார்க்க முடியுதா? இங்க இந்த left side மூலை ல ஒரு உருவம் மேகத்துல ஒளிஞ்சிகிட்டு அம்பு விட்டுக்கிட்டு இருக்கு பாருங்க.
அவனோட பேரு இந்திரஜித் இவன் ராவணனோட மகன். இதுல ரொம்ப சுவாரசியமா மேகங்கள்ல தண்ணிய கூட பாக்க முடியுது. So, பழங்கால ஸ்தபதிகளுக்கு மேகங்கள்ல இருந்து தான் தண்ணி release ஆகுது ங்கர விஷயம் தெரிஞ்சு இருந்திருக்கு. இந்த அழகான சிற்பமும் ஆயிரம் வருஷங்களுக்கு பழமையானது. இது தாய்லாந்துல இருக்குற Phimai கோவில்ல இருக்கு. ராமரும் லக்ஷ்மணரும் தரையில விழுந்துக்கு அப்புறம் வானரப் படைக்கு என்ன ஆச்சுங்குறத இந்த சிற்பம் காமிக்குது.