மார்கழி மாதமும் ஆண்டாளின் பக்தியும்

Опубликовано: 03 Август 2026
на канале: kanagasankari s
70
14

"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்" என்று கோதை நாச்சியார் தனது திருப்பாவைப் பாடல்களால் கண்ணனை கன்னித்தமிழின் துணைகொண்டு ஆராதனை செய்த மாதம் இந்த மார்கழி மாதம்.
"மாதங்களில் நான் மார்கழி" என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியது பக்தி மார்க்கத்தால் சாதாரண மானிடனும் பக்திமார்கத்தால் தன்னை சரணடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
பன்னிரெண்டடுஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண் என்பதால் மற்ற ஆழ்வார்களுக்கில்லாத சிறப்பாக கண்ணன் மீது கொண்ட பக்தியை ஆண்டாளால் காதலாகவும் வழங்க முடிந்தது.
மானிடப் பிறவியான நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே.
தைமாதம் தொடங்கி ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகின்றது. இந்த காலத்தை உத்தராயணம் என்று கூறுகின்றோம்.
ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாக அமைகின்றது . இதை தட்சிணாயணம் என்று சொல்கிறோம்.
இந்த தட்சிணாயன காலம் நிறைவடையும் நேரமான அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் ஆகும். தேவர்களுக்கே பிரம்மமுகூர்த்தமாக இருக்கின்றபடியால் மானிடர்களுக்கும் சிறந்த மாதமாக இது இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மார்க்கண்டேய சரித்திரம் மரணத்தை வெல்லும் மார்கழி என்று இந்த மாதத்தின் பெருமையை நமக்கு உணர்த்துகிறது. எனவே தான் "மிருத்யுஞ்சய ஹோமம்" செய்ய மார்கழி மாதத்தை தேர்ந்தெடுத்தார்கள்.
கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்த ஆண்டாளுக்கு அருள்புரிந்த அரங்கன் பங்குனி உத்திரத்தில் ஆண்டாளை மணந்துகொண்டார். ஆகவே பெண்கள் இம் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய மணாளன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.