திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை
• திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை| ...
திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு
• திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு | Thi...
திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து
• திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து |...
------------------------------------------------------------
குறள் 31:
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
குறள் 32:
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
குறள் 33:
ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
குறள் 35:
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்
குறள் 36:
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
குறள் 37:
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
குறள் 39:
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
குறள் 40:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
---------------------------------------------------
#trending #viral #thirukkural