108. ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)
வசனங்கள்: 03
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்).
اِنَّاۤ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَؕ
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 108:1 )
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ؕ
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
(அல்குர்ஆன் : 108:2 )
اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.
(அல்குர்ஆன் : 108:3 )