கல்லணை - வரலாறு

Опубликовано: 29 Август 2026
на канале: Tamizh Thozhan
1,453
27

கல்லணை:

அமைவிடம் திருச்சிராப்பள்ளியில் இருந்த 15 கிமி, தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று: 10.830166°N 78.818784°E
திறந்தது 2 ஆம் நூற்றாண்டு
வகை நீர்தேக்கம்
Impounds காவிரி ஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம்
நீளம் 0.329 km (1,079 ft)
அகலம் (base) 20 m (66 ft)

கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது.

கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆக பிரிக்கிறது.

பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு ) திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின்ப ல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.