என்னது! வாத்து பிடிக்க ஏரி நீருக்குள் அரண்மனையா? Water palace

Опубликовано: 17 Июль 2026
на канале: MOHANRAJ R
359
2

நீருக்குள் நின்றிடும் அரண்மனை

இக்காட்சியைக் கண்டவுடன் பெருமழை பெய்து, அதனால் பெரு வெள்ளம் வந்து, கட்டடத்தை நீர் சூழ்ந்து விட்டதாக எண்ணாதீர்கள்.
ஏனெனில் இந்த கட்டடம் கட்டப்பட்டிருப்பதே நீருக்குள் தான்.
நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாநகரில் உள்ள ஜல் மஹால்.

இது ஆங்கிலத்தில் வாட்டர் பேலஸ் என்றும் தமிழில் நீர் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது.

மன்சாகர் ஏரியில் அமைந்துள்ள இந்த நீர் அரண்மனை 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று காண்போரை கவர்ந்திழுக்கும் மிகப்பெரிய சுற்றுலா தலமாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்த நீர் அரண்மனை கட்டப்பட்டதன் நோக்கம் அரண்மனையாக பயன்படுத்துவதற்கு அல்ல மாறாக மன்னர் இந்த நீர் நிலையில் உள்ள வாத்துகளை வேட்டையாடும் போது தங்குவதற்கான ஒரு இடமாகத்தான் இது கட்டப்பட்டது.

முகாலய மற்றும் ராஜபுத்திர கலைப் பாணியிலான இந்த கட்டடம் இளஞ்சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஏரியின் நீருக்கு மேலாக நாம் காண்பதற்கு ஒற்றைத் தளத்தைக் கொண்டிருக்க கூடிய இந்த அரண்மனை வெறும் ஒற்றைத்தளத்தை கொண்டது அல்ல, நீருக்குள்ளாக இதன் நான்கு தளங்கள் உள்ளன. இதன் வலிமை வாய்ந்த சுவர்கள் மில்லியன் கணக்கான லிட்டர் நீரினை தாங்கி நிற்கிறது.

இக்கட்டடத்தின் சிறப்புமிக்க சுண்ணாம்பு சாந்து இக்கட்டிடத்தை நீர் சிதைக்காவண்ணம் பாதுகாத்து இருக்கிறது

இந்த அரண்மனையின் மேற்கூறையில் தோட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

jal mahal jaipur, jal mahal history, நீர் அரண்மனை,ராஜஸ்தான் சுற்றுலா,rajasthan tourist places,ராஜஸ்தான் நீர் அரண்மனை,rajasthan water palace, water palace jaipur, water palace history,