தார் பாலைவனம் ஏன் வறண்டு போனது தெரியுமா? why thar is a desert?

Опубликовано: 13 Июль 2026
на канале: MOHANRAJ R
709
16

தார் பாலைவனம் ஏன் வறண்டு போனது தெரியுமா? why thar is a desert?,
இது இந்தியாவின் வடமேற்குப் பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மையாக பரவியுள்ள தார்பாலைவனத்தின் பகுதிகள்.

இந்த தார் பாலைவனத்தின் பகுதிகள் குஜராத் மாநிலத்திலும், அண்டை நாடான பாகிஸ்தானிலும் நீண்டுள்ளது.

இந்தியாவில் பரவி இருக்கும் இந்த பாலைவனத்தின் பகுதிகள், தார் பாலைவனம் என்றும்,

பாகிஸ்தானில் பரவிருக்கும் பகுதிகள் சோலிஸ்தான் பாலைவனம் என்றும் அழைக்கப்படுகிறது.

சரி, இப்பகுதி ஏன் பாலைவனமாக மாறியது,

அதற்கு காரணம், ஆரவல்லி மலைத்தொடர்.

ஆரவல்லி மலைத்தொடர், தார் பாலைவனத்தின் கிழக்கு பகுதியில் அமைந்து மழைப்பொழிவை அளிக்கக்கூடிய தென்மேற்கு பருவக்காற்று இப்பகுதியை அடையாவண்ணம் தடுத்து நிறுத்துவதால், இது மழை மறைவுப் பிரதேசமாகி, இங்கு மழை பொழிவு தடைபட்டுள்ளது.

அதனால் இப்பகுதி மிகவும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது,

இங்கு மழை பொழிவானது ஆண்டுக்கு 100 மில்லி மீட்டர் முதல் 500 மில்லி மீட்டர் வரை மட்டுமே பெய்கிறது

நீங்கள் இக்காட்சியில் காண்பது போன்று, மணல் குன்றுகள் இப்பாலைவனத்தின் எல்லா பகுதிகளிலும் காணப்படுவதில்லை. ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றது.

இப்பகுதியில் காணப்படும் மணல் குன்றுகளின் தோற்றம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் காற்று.

இப்பகுதியில் வீசும் காற்றின் காரணமாக மணல் ஓரிடத்தில் இருந்து அடுத்தடுத்த இடங்களில் குவிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இதனால் இவற்றின் தோற்றமும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பகுதியில் போடப்பட்டிருக்கும் சாலைகளை இவைகள் அடிக்கடி மூடி பதம் பார்க்கின்றன.

இப்பகுதியில் நான் களப்பயணம் சென்றபோது கண்ட தாவரங்களில் பெரும்பாலானவை எருக்கஞ்செடிகளும், முள்மரங்களும் தான்.

இங்கு வசிக்கூடிய மக்கள் கால்நடைகளை மேய்க்கக்கூடிய காட்சிகளை என்னால் பார்க்க முடிந்தது. அதிலும் குறிப்பாக கால்நடைகள் என்றால் ஆடுகளும் மாடுகளும் தான் பிரதானமாக இருந்தன.

நான் இங்கு பார்த்த ஒட்டகங்களில், பெரும்பாலானவை சுற்றுலாப் பயணிகளின் சவாரிகளுக்காக பயன்படுத்தப்பட்டதை தான் என்னால் பார்க்க முடிந்தது.

இந்தப் பாலைவனத்தில் காற்றாலை மின்சார உற்பத்திக்கு தேவையான காற்றாடிகள் ஆங்காங்கே நிறுவப்பட்டிருந்தது.

இங்கு வசிக்கக்கூடிய மக்களை காட்டிலும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததை என்னால் அறிய முடிந்தது.

இப்பகுதியில் வேளாண்மை நடைபெறும் காட்சியை என்னால் காண முடியவில்லை. ஆனால் சில பகுதிகளில் மட்டும் நிலப்பகுதிகள் உழப்பட்டிருந்த காட்சிகளை பார்க்க முடிந்தது.

வழி நெடுகிலும் சுற்றுலா பயணிகள் தாங்க கூடிய, விடுதிகள் மிகுந்து இருப்பதை பார்க்க முடிந்தது.

நான் சென்ற காலத்தில் அதாவது டிசம்பர் மாதத்தில், குளிரானது என்னை வாட்டி வதைத்தது. இரவு நேரங்களில் அதிகமான குளிர், பகல் நேரங்களில் அதிகமான வெப்பநிலை என இரண்டையும் என்னால் உணர முடிந்தது. அதிலும் குறிப்பாக நான் சென்ற நேரத்தில் வெயிலை விட குளிர் தான் என்னால் தாங்க முடியாத நிலையில் இருந்தது. கிட்டத்தட்ட பகல் 12 மணி வரை நான் மாட்டியிருந்த ஸ்வெட்டரை கழற்றவே இல்லை.

why thar desert formed ,why thar desert receives less rainfall,thar desert rajasthan,thar desert rajasthan tamil,rajasthan desert,தார் பாலைவனம் ,thar palaivanam in tamil,ராஜஸ்தான் பாலைவனம்,jaisalmer desert,ஜெய்சால்மர் பாலைவனம்,