யானையைப் போன்றே உருவம் கொண்ட விலங்கு இன்று உலகில் இல்லா விலங்கு அது என்ன விலங்கு தெரியுமா?
இன்று நிலத்தில் வாழும் விலங்குகளுள் மிகப்பெரிய உருவம் கொண்ட விலங்காக யானை உள்ளது.
உலகில் தற்போது மூன்று வகையான யானைகள் உள்ளன 1.ஆப்பிரிக்க சவானா யானைகள் 2.ஆசிய யானைகள் 3.ஆப்பிரிக்க காட்டு யானைகள்
IUCN சிவப்பு பட்டியலின்படி ஆசிய யானைகளும் ஆப்பிரிக்க சவானா யானைகளும் அருகி வரும் விலங்குகளின் பட்டியலில் உள்ளது, அதாவது ENDANGERED SPECIES ஆக உள்ளது ஆப்பிரிக்க காட்டு யானைகள் மிகவும் அருகி வரும் விலங்குகளின் பட்டியலில் அதாவது CRITICALLY ENDANGERED SPECIES பட்டியலில் உள்ளது.
இவைகள் எலிபாண்டிடே Elephantidae குடும்பத்தைச் சேர்ந்தவை
மாமூத் mammoth என்பது யானையைப் போன்றே தோற்றம் கொண்ட விலங்காகும் ஆனால் மாமூத் விலங்குகள் இப்பூமியில் இருந்து முற்றிலும் அழிந்துவிட்டன.
யானைகள் குடும்பமாக வாழும் தன்மை கொண்டவை
பொதுவாக வேட்டை விலங்குகளான புலி சிங்கங்கள் போன்றவை யானையை வேட்டையாடுவதை தவிர்க்கின்றன
ஆப்பிரிக்கா யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை
ஆப்பிரிக்க யானைகள் அதன் தத்தங்களுக்காக பெரும்பாலும் வேட்டையாடப்படுகின்றன, ஆசிய யானைகளோ வாழ்விடப் பற்றாக்குறையால் அவற்றின் எண்ணிக்கை குறைவை சந்தித்து வருகின்றன. ஆக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகள் இரண்டும் எண்ணிக்கை குறைவை சந்தித்து வருகின்றன.
இந்தியாவில் உள்ள ஆசியப் பெண் யானைகளில் பொதுவாக தந்தம் காணப்படுவதில்லை ஆண் யானைகளில் தந்தம் காணப்படுகிறது. தந்தம் என்பது யானையினுடைய பல்லின் நீட்சியாகும்
தும்பிக்கை என்பது அதன் மூக்காகும் இது நீண்டு காணப்படுவதால் இத்தகைய தோற்றத்தை பெற்றுள்ளது.
அது சரி மற்ற விலங்குகளில் காணப்படாமல் யானைகளில் மட்டும் ஏன் மூக்கானது இவ்வாறு தும்பிக்கையாக அதாவது கையைப் போன்று நீண்டு காணப்படுகிறது. அதற்கு காரணம். அதனுடைய மிகப் பருமனான உடலாக இருக்கலாம். சிறிய அளவிலான உடலாக இருந்தால் நேரடியாக தலையை குனிந்தோ அல்லது வளைந்தோ வாயினால் உணவை உண்டிருக்க முடியும். ஆனால் யானையோ மிகப் பருமனான உடலை கொண்டிருப்பதால் அவ்விலங்கால் நேரடியாக வாயினால் உணவை எடுத்து உண்பது கடினமாக இருக்கலாம். அதன் காரணமாக அதன் மூக்கானது இவ்வாறு தும்பிக்கையாக நீண்டு இருக்கலாம். இதனால் யானையானது நின்றவரே எளிமையாக பொருட்களை எடுத்து உண்பதற்கு ஏற்றவாறு இந்த தகவமைப்பை பெற்றிருக்கக் கூடும்.
நீங்கள் இங்கே ஒன்றை நினைக்கக்கூடும் அதாவது அதன் மூக்கானது கை போன்று மாறுவதற்கு பதிலாக, மனிதர்களில் காணப்படுவது போல் அதன் முன்னங்கால்களையே கைகளைப் போன்று பயன்படுத்தி இருக்கலாமே என்று, ஆனால் இங்கே ஒன்றை நீங்கள் நினைவில் வைக்க வேண்டும் யானையானது மிக பருமனான உடலை கொண்டிருப்பதால், வெறும் இரு கால்களால் மட்டும் அதன் மொத்த உடலை தாங்கி நிற்பது மிகக் கடினமான ஒன்று, நான்கு கால்களால் நின்றால் தான் அதன் மிகப்பெரிய பருமனான உடலை தாங்கி நிற்க முடியும். எனவே முன்னங்கால்களை கைகளைப் போன்று தொடர்ந்து பயன்படுத்துவது கடினம். அதன் காரணமாகத்தான் அதனுடைய மூக்கை இவ்வாறு கை போன்று அதாவது தும்பிக்கையாக மாற்றி இருக்கக்கூடும்.
யானைகள் தாவர உண்ணிகள் இவைகள் தாவரங்களை உண்டு வாழ்கின்றன.
யானை ஒலி எழுப்புதலை பிளிறுதல் என்பார்கள்.
பாலூட்டிகளில் மிக நீண்ட கர்ப்ப காலத்தை கொண்டுள்ளது யானைகள், இவற்றின் கர்ப்ப காலம் 22 மாதங்கள் ஆகும். பொதுவாக யானைகள் ஒரு சமயத்தில் ஒரு குட்டியை ஈனுகின்றன.
WHICH IS THE BIGGEST ANIMAL IN THE LAND WORLD, dubare elephant camp,dubare elephant camp coorg,dubare elephant camp in Karnataka, Elephas Maximus, Asian elephants,mammoth,elephant details in tamil,elephant types,african elephant,யானை,யானை பற்றிய தகவல்கள் தமிழ் ,மாமூத் யானை,யானை வகைகள்,ஆசிய யானை,ஆப்பிரிக்க யானை,துபாரே யானைகள் முகாம் கர்நாடகா,