அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவிர்கள் நல சங்கம் 5ஆம் ஆண்டு துவக்கவிழா சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி நீதியரசர் கற்பக விநாயகம், தி. நகர் பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ஏழுமலை , அகில இந்திய ரியல் எஸ்டேட் முகவர்கள் கூட்டமைப்பு தலைவர் ஆ.ஹென்றி , இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எம்ப்ளாயிஸ் யூனியன் தேசிய தலைவர் இரா.முகுந்தன் , மக்கள் பாதுகாப்பு உரிமை கழகம் தலைவர் எம் . ஜெயராமன், பீப்பிள் ஃபோரம் ஆஃப் இண்டியா தலைவர் எஸ். மணிமொழியான் ஆகியோர் கலந்துகொண்டு சங்கத்தின் புதிய லோகோவை வெளியிட்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் சங்கத்தின் சார்பாக நூல் வெளியிட்டனர்.
அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவிர்கள் நல சங்க மாநில தலைவர் மதிமாறன் மற்றும் மாநில பொருளாளர் சுரேஷ்பாபு ஆகியோர் தலைமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜி.கனகேஸ்வரன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் மதிமாறன், பொருளாளர் சுரேஷ் பாபு ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
பெயிண்டர்கள் கட்டுமானத் தொழில் வரையறைக்குள் தான் வருகிறார்கள் ஆனால் எங்களுக்கு தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் அதற்கான பிரதிநிதித்துவமோ , முக்கியத்துவமோ தரப்படுவதில்லை.
ஆகவே பெயிண்டர்கள் ஓவியர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும் என்று முதன்மையான கோரிக்கையாக வைக்கின்றோம்.
இது சம்பந்தமாக அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து முறையிட்டும் அதற்கு தீர்வோ தகுந்த பதிலோ இதுவரையில் தரப்படவில்லை
பெயிண்டர்களுக்கு வாரியத்தின் முக்கியத்துவம் கொடுத்து அரசின் திட்டங்கள் சென்றடையும் படி ஆவண செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறோம் என்று தெரிவித்தனர்.
Makkal Nanayam