தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழிய நல சங்கம் பல்வேறு கோரிக்கைகள வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

Опубликовано: 01 Июль 2026
на канале: Makkal Nanayam
120
4

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழிய நல சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகள வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

சென்னை :
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழிய நல சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகள வலியுறுத்தி சென்னை எழும்பூர் எய்ட்ஸ் கட்டுபாட்டு மைய வளாகத்தில் நடைப்பெற்றது.

இதில் மாநில தலைவர் ஜெயந்தி தலைமையில் நடைப் பெற்ற இந்த கூட்டத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நல சங்கம் நிர்வாகியும் , தேசிய சேர்மன் கமிட்டி உறுப்பினருமான ப. ஜெகஜோதி , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் எஸ் .தமிழ்ச்செல்வி , மாநில பொதுச்செயலாளர் மா .சேரலாதன் , மாநிலத் துணை தலைவர்கள் எஸ் .ரவி , செ. மணிவாசகன், தமிழ்நாடு மோட்டார் வாகன போக்குவரத்து பணிமனை ஊழியர் சங்கம் தலைவர் எம். வெங்கடேசன் ,108 ஆம்புலன்ஸ் தோழிலாளர்கள சங்க பொதுச்செயலாளர் ஆர் .ராஜேந்திரன் , பழனிவேல் ராஜன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேசிய சேர்மன் கமிட்டி உறுப்பினருமான ஜெகஜோதி
செய்தியாளர்களிடம் பேசுகையில் :

தமிழகத்தில் 186 எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை முட மத்திய அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் எனவும்
திமுக அரசு அளித்துள்ள
தேர்தல் வாக்குறுதி படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
மத்திய அரசு அறிவித்தபடி 10% ஊதிய மாற்றத்தை தமிழகத்தில் அரசு ,இ .எஸ் .ஐ , மாநகராட்சி மருத்துவமனைகளில் ஊதிய உயர்வை அமல்படுத்தியது.
ஆனால் அரசு 400க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை அதை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
செப்பம்பர் மாதம் முதல் 10% ஊதிய உயர்வை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர் என்று அவர் தெரிவித்தார்.

Makkal Nanayam