சென்னையில் குக்கீ மக்கள் மணிப்பூர் படுகொலை, பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Опубликовано: 14 Сентябрь 2026
на канале: Makkal Nanayam
1,344
12

சென்னையில் குக்கீ இன மக்கள் ஒன்று கூடி மணிப்பூர் மாநில படுகொலை , பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் குக்கி, ஜூ ,நாகா இன மக்களுக்காக எதிராக படுகொலை, பெண்கள் பாலியல் வன்கொடுமை,சொத்து மற்றும உடைமைகளை எரித்தல் ,வீடுகளை எரித்தல் போன்ற கொடுஞ்செயல்களை செய்யும் மைத்தீகளுக்கு ஆதரவாக செயல்படும் மணிப்பூர் முதல்வர் பைரோன்சிங் , அவரது மகன் தலைமையில் மைத்தீ ஆயுத குழுக்களை கொண்டு குக்கிகளை அழித்தொழிக்க துடிக்கும் இவர்களுக்கு எதிரான கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் குக்கி, ஜூ, நாகா இன மக்கள் ஒன்று கூடி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:
குக்கி, ஜூ மற்றும் நாகா இன மக்கள் போராட்டத்திற்கு செய்தியாளிடம் பேட்டி அளிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளனர் .
இவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க கூட பயப்படுகிறார்கள் .
இவர்களின் அச்சம் மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் சம்பவங்களின் பிரதிபலிப்பையே நான் உணர்கிறேன்.
மணிப்பூர் முதலமைச்சர் பைரோன்சிங் அவரது மகன் தலைமையில் தான் குக்கி மக்களை கொன்றொழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆயுத குழுக்களை கொண்டு செயல்படுகிறார்கள் என்பதை கேட்க நமக்கே மனம் பதறுகிறது .
ஆர்ப்பாட்டத்தில் கூடியிருக்கும் மக்களும் அரங்க பேச்சைக் கேட்டு கண்ணீருடன் அமர்ந்திருக்கின்றனர் .
இதற்கு காரணமான பாஜகவை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் மணிப்பூர் மட்டுமல்லாது ராஜஸ்தான் , அரியானா ஆகிய மாநிலங்களிலும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற ஆர்.எஸ்.எஸ் -ன் துணை அமைப்புகளை கொண்டு கலவரத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது .

இவை அனைத்தும் பாஜகவின் வீழ்ச்சிக்கு அவர்களே சவக்கழி வெட்டி கொண்டு இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது .
மணிப்பூர் குக்கி மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு இருப்பது ஆறுதலாக இருக்கிறது.
தமிழக முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மணிப்பூர் குக்கி மக்களை சந்தித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Makkal Nanayam