கொரானா-இரண்டாம் அலை பெரும் தொற்றிலும்"தாய் உள்ளம் அறக்கட்டளையின்" சார்பாக உணவு வழங்கப்பட்டது

Опубликовано: 14 Сентябрь 2026
на канале: Thai Ullam Arakkattalai (Santhosh.V)
74
1

கனடாவைச் சேர்ந்த E.N.அறப்பணியின் இயக்குனர்,
திரு.தவரத்தினம் பிரபாகரன் அவர்களின் மகள்களான பிரவினா மற்றும் பிரிந்தா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு,

அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நமது

"தாய் உள்ளம் அறக்கட்டளைக்கு" அவர்கள் அனுப்பிய தொகையில்,

ஓசூரை சுற்றியுள்ள பகுதிகளில்,மனநலம் பாதிக்கப்பட்ட,வயது முதிர்ந்த,மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சிறுவர், சிறுமிகள் உட்பட அனைவருக்கும் மற்றும் வட இந்தியாவில் இருந்து பிழைப்புத் தேடி, பிழைப்பு இல்லாமல் வறுமையில் வாடும் மக்களுக்கும்,

இன்று சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின், முகக் கவசம் கொடுக்கப்பட்டு அவற்றை அணிந்த பிறகு அனைவருக்கும் முட்டையுடன் கூடிய குஸ்கா உணவு வழங்கப்பட்டது.

இன்று உணவு வழங்கிய
E.N. அறப்பணியின் இயக்குனர்
திரு.தவரத்தினம் பிரபாகரன் அவர்களும் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரும் வளமுடனும், நலமுடனும், பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்

"தாய் உள்ளம் அறக்கட்டளை"

"தாய் உள்ளம் குருதிக் கொடையாளர்கள் குழு"

"தாய் உள்ளம் புக் ஆஃப் வேர்ல்டு அச்சீவர்ஸ்"

"ஓசூர் ரீச் மீடியா"

மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து தொப்புள் கொடி உறவுகளின் சார்பாகவும் பிரணிதா மற்றும் பிரிந்தா ஆகியோருக்கு கோடான கோடி நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

மேலும் உணவை சிறந்த முறையில் தயார் செய்து கொடுத்த ஓசூர், ஆவாலப்பள்ளி ஹட்கோ ரோட்டில் அமைந்திருக்கும் கோமதி அம்மன் மெஸ் உரிமையாளர் சிவா அவர்களுக்கும், உணவை பார்சல் செய்து பத்திரமாக கொடுத்த பசுபதி, முருகேசன், வேலாயுதம் மற்றும் உணவை சிறந்த முறையில் தயார் செய்து கொடுத்த முருகன் மாஸ்டர் அவர்களுக்கும்,

உணவை எடுத்து வந்து தந்த ஆட்டோ ஓட்டுனர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நன்றி வணக்கம்.