உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்தக் கொரனா காலகட்டத்தில் மனதை நெகிழச் செய்யும் மற்றும் ஒரு

Опубликовано: 11 Июль 2026
на канале: Thai Ullam Arakkattalai (Santhosh.V)
45
1

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்தக் கொரனா காலகட்டத்தில் மனதை நெகிழச் செய்யும் மற்றும் ஒரு சம்பவம்,

"தாய் உள்ளம் அறக்கட்டளையின்" நிறுவனர்
வேதமூர்த்திக்கும்,

ஓசூர்"ரீச் மீடியாவின்" ஜெயமுருகன்,

"ஓசூர் பசுந்தென்றல் அறக்கட்டளை" துரைப்பாண்டி,

உடலை நல்லடக்கம் செய்ய உதவிய இலங்கை, யாழ்ப்பாணம், உரும்பிராய்,ASN மாணவர் சமூக சேவைக்கழகத்தின் வலன்ரீனா

ஆகியோருக்கு பொதுமக்களிடம் குவியும் பாராட்டுக்கள் :

கடந்த 03.05.2021-ஆம் தேதி ஓசூர் பேருந்து நிலையத்தில் 25 வயது முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்தவர் அதே இடத்தில் இறந்து போனார்.

பொதுமக்களின் அறிவிப்பின் பெயரில் ஆம்புலன்ஸ் உதவியால் ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டார்.

காவல்துறை விசாரணையின் முடிவில் அந்த இளம்பெண் ஓசூர் பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று, ஆதரவில்லாமல் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

காவல் துறையின் மூலமாக விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை என்பதும் தெரியவந்தது.

உறவினர்கள் யாரும் அவரது உடலை வந்து பெற்று செல்லாத நிலையில்

"தாய் உள்ளம் அறக்கட்டளையின்" நிறுவனர்
திரு.வேதமூர்த்திக்கு இன்று அலைபேசி வழியாக,

ஓசூர் நகர காவலர் திரு செல்வம் அவர்கள் தகவல் தெரிவிக்க, அந்த நேரம் தாய் உள்ளம் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.வேதமூர்த்தி அவர்கள் புதுக்கோட்டையில் இருக்க அவர் தொலைபேசி வழியாக ஓசூர் ரீச் மீடியாவை சேர்ந்த திரு N.ஜெயமுருகன் மற்றும் ஓசூர் பசுந்தென்றல் அறக்கட்டளை நிறுவனர் துரைப்பாண்டி ஆகியோருக்கு தகவல் தெரிவித்து,

ஓசூர் அரசு மருத்துவமனையிலிருந்து இறந்த முதியவரின் உடலை நகர காவல்துறை அதிகாரி
திரு. செல்வம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திரு காளியப்பன்,
திரு. சென்ராயன் உதவியுடன் ஓசூர் அலசநத்தம் பகுதி இடுகாட்டில் இறந்த இளம் பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

தாய் உள்ளம் அறக்கட்டளை நிறுவனர்
திரு. வேதமூர்த்தி மாலை 5 மணிக்கு இடுகாட்டுக்கு வந்ததை தொடர்ந்து,

அவர்கள் அனைவரும் இணைந்து ஆதரவில்லாமல் இழந்த அந்த இளம்பெண் உடலுக்கு முறையான சம்பிரதாயங்களின் படி இறுதி சடங்கு செய்யப்பட்டது.

தாய் உள்ளம் அறக்கட்டளையின் நிறுவனர் வேதமூர்த்தி,
ஓசூர் ரீச் மீடியாவின் தலைவர் ஜெயமுருகன்,
பசுந்தென்றல் அறக்கட்டளை துரைப்பாண்டி, காவல்துறை அதிகாரி
திரு. செல்வம், நகராட்சி ஊழியர்கள் காளியப்பன்
மற்றும் சென்ராயன் ஆகியோரின் பணி மிகவும் பாராட்டுதலுக்குரியது

ஆதரவில்லாமல் இழந்த அந்த இளம் பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்ய பணம் உதவி செய்த

இலங்கை, யாழ்ப்பாணம், உரும்பிராய்,ASN மாணவர் சமூக சேவைக்கழகத்தின் வலன்ரீனா

அவர்களின் இத்தகைய சேவை மனப்பான்மையைப் பாராட்டுவதுடன் அவர்களின் இல்லத்தாருடன் எல்லா நலமும் வளமும் பெற்று வளமுடன் வாழ வேண்டும் என பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.🙏🙏🙏

இவர்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நலமுடனும், வளமுடனும் வாழ, தாங்கள் அனைவரும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.