நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா, சங்கமங்கலம் கிராமத்தில் கடந்த 7 தினங்களுக்கு முன்பாக,எதிர்பாராத விதமாக சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 6 வீடுகள் சேதம் அடைந்தது என்று வாட்ஸ்அப் மூலமாக தன்னார்வலர்
திரு. ராஜாமணி மூலம் நமது தாய் உள்ளம் அறக்கட்டளைக்கு தெரியப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து "தாய் உள்ளம் அறக்கட்டளையின்" நிறுவனர் வேதமூர்த்தி அவர்கள்,
திரு.தவரத்தினம் பிரபாகரன், இயக்குனர், கனடா மற்றும் இலங்கையில் உள்ள
ASN மாணவர் சமூகசேவைக் கழகம் , உரும்பிராய், யாழ்ப்பாணம், இலங்கையைச் சேர்ந்த வலன்ரீனா ஆகியோரிடம்
தகவலை தெரிவித்து அவர்களிடம் உதவி கோரினார்.
முதல்கட்ட உதவியாக வீட்டுக்கு தேவையான அரிசி மூட்டை, பருப்பு, ஆயில் உள்ளிட்ட இதர மளிகை பொருள்கள் மற்றும் போர்வை, துண்டு கைலி போன்ற துணி மணிகள், சில்வர் தட்டு,டம்ளர் போன்ற 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நேரடியாக களத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட, எரிந்த வீட்டில் மிகவும் கஷ்டமான சூழலில் இருந்த ஒவ்வொரு நபரையும் நேரடியாக சந்தித்து ஊராட்சி மன்ற தலைவர்
G.பக்கிரிசாமி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்
R.மனோஜ் குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஓசூர் மற்றும் தஞ்சாவூர் தாய் உள்ளம் அறக்கட்டளை நிறுவனர் ச.வேதமூர்த்தி BA,மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், அரியாணிப்பட்டி, ரெனிவல் பவுண்டேஷன் நிறுவனர் முனைவர் க.வீரமணி மற்றும் தன்னார்வலர்கள் ராஜாமணி மற்றும் ஆகியோருடன் இணைந்து அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த உதவியை வழங்கிய கனடாவைச் சேர்ந்த
E.N அறப்பணிக்கும், இந்த மாபெரும் உதவியை செய்வதற்கு உதவி புரிந்த தாய் உள்ளம் அறக்கட்டளையின் நிறுவனர் வேத மூர்த்திக்கும் மற்றும் இந்த உதவி புரிய காரணமாய் இருந்த அனைத்து சமூக சேவகர்களுக்கும், தீயினால் பாதிக்கப்பட்ட அனைவரும் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தது பார்ப்போர் அனைவரையும் நெகிழ செய்த சம்பவக அமைந்தது.